For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இவன் என்னை கெடுத்து விட்டான்’..!! ’முதல்வரின் மகனாக இருந்தாலும் எனக்கு பயமில்லை’..!! நடிகை சுஜிதா பகீர் தகவல்..!!

04:34 PM Dec 12, 2023 IST | 1newsnationuser6
’இவன் என்னை கெடுத்து விட்டான்’     ’முதல்வரின் மகனாக இருந்தாலும் எனக்கு பயமில்லை’     நடிகை சுஜிதா பகீர் தகவல்
Advertisement

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற கதாபாத்திரத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றவர் நடிகை சுஜிதா. மறுபக்கம் சினிமாவிலும் அவ்வப்போது தன்னுடைய பங்களிப்பை கொடுத்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இவர், சமுதாயத்தில் பெண்களுக்கு இழைக்கப்படக்கூடிய அநீதிகள் குறித்து பேசி இருக்கிறார்.

Advertisement

அதாவது, ”பெண்கள் என்றாலே பலவீனமானவர்கள் என்ற ஒரு கருத்தை சமுதாயத்தில் கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒரு ஆண் அழுகிறார் என்றால் நீ என்ன பொம்பள மாதிரி அழுதுட்டு இருக்க என்று கேட்கிறார்கள். ஏன் பெண்கள் மட்டும் தான் அழ வேண்டுமா..? ஆண்கள் அழக்கூடாதா..? அது என்ன பொம்பள மாதிரி அழுதுட்டு இருக்க என்று பெண்களை பலவீனமானவர்கள் என்பது போன்ற ஒரு பிம்பத்தை உருவாக்க முயல்வது.

பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஒருவன் உங்களிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறான்.. உங்களை கெடுத்து விட்டான் என்றால் கூட அதனை வெளிப்படையாக பொது வழியில் சொல்லிப் பழக வேண்டும். இவன் என்னை கெடுத்து விட்டான் என்று பொதுவெளியில் வெளிப்படையாக கூறுங்கள். தவறே கிடையாது. அவன் முதலமைச்சர் மகனாக இருந்தாலும் சரி.. எனக்கு பயமில்லை.. பிரதமரின் மகனாக இருந்தாலும் சரி.. எனக்கு பயமில்லை.. எவனாக இருந்தாலும் ஒரு பெண் மீது கை வைத்தால் தண்டனை உண்டு.

நான் இதை செய்தால், அவள் வெளியே சொல்லிவிடுவாள் என்ற பயம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் இப்படியான குற்றங்கள் குறையும் என பேசி இருக்கிறார் நடிகை சுஜிதா.

Tags :
Advertisement