முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மனைவி உயிரிழந்த பிறகு மாமியாருடன் உடலுறவு…! நேரில் பார்த்த மாமனார்…!

11:28 AM May 01, 2024 IST | shyamala
Advertisement

பீகாரில் மாமியாரை காதலித்த மருமகனுக்கு மாமனாரே திருமணம் செய்து வைத்த வினோத கதையை தற்போது பார்ப்போம்.

பாங்கா நகரை சேர்ந்தவர் சிக்கந்தர் யாதவ். இவரது மனைவி, சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மாமனார் திலேஷ்வர் தார்வே மற்றும் மாமியார் கீதாதேவி ஆகியோர் மருமகனான சிக்கந்தர் யாதவுடனே தங்கிவிட்டனர்.

Advertisement

நாட்கள் செல்ல செல்ல சிக்கந்தருக்கும், அவரது உயிரிழந்த மனைவியின் தாயார் கீதா தேவிக்கும் ஒரு சமயத்தில் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாமனார் திலேஷ்வர் தார்வேக்கு இவர்கள் இருவரும் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கள்ளத்தொடர்பாக இருக்கலாமோ என்ற சந்தேகம் இருந்த நிலையில் அதனை அவர் உறுதி செய்தார். இதையடுத்து, அவர்களின் நெருக்கத்தை நேரில் பார்த்த திலேஷ்வர், அவர்களை கையும் களவுமாக பிடித்துவிட்டார். அதனை அப்படியே விடாமல் ஊர் பஞ்சாயத்தில் முறையிட்டார்.

பஞ்சாயத்து கூட்டத்தில், கிராமத்தார் முன்னிலையில் தனது மாமியாருடன் காதல் ஏற்பட்டதாக சிக்கந்தர் யாதவ் வெளிப்படையாக கூறினார். மருமகனின் பேச்சை கேட்ட பஞ்சாயத்தினர் அவரின் சம்மதத்துடனும் கீதா தேவியின் சம்மதத்துடனும் இருவருக்கும் அனைவர் முன்னிலையிலும் திருமணம் செய்து வைத்தனர். அந்த திருமணத்தை சட்டப்படி நீதிமன்றத்திலும் பதிவு செய்தனர். இதில், இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்ததே மாமனார் திலேஷ்வர் தார்வே என்பது தான் விநோதம். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
illegal affair newsமாமியாரை காதலித்த மருமகன்
Advertisement
Next Article