For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காதலனின் தாயை அரை நிர்வாணமாக தூக்கிச் சென்று துன்புறுத்தல்..!! பெண்ணின் தந்தை கொடூர செயல்..!!

Surender's mother Murukamma was abducted from her home and tortured in the forest. Also, they beat and tortured Surender to reveal his whereabouts and made him half-naked.
11:18 AM Aug 17, 2024 IST | Chella
காதலனின் தாயை அரை நிர்வாணமாக தூக்கிச் சென்று துன்புறுத்தல்     பெண்ணின் தந்தை கொடூர செயல்
Advertisement

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கீழ்மொரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேந்தர் (வயது 24). கீழ்மொரப்பூரை அடுத்த கணபதிபட்டி பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவரது மகள் பவித்ரா (23). இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படும் நிலையில், பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில் சுரேந்தர், பவித்ரா இருவரும் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பூபதி, சுரேந்தர் தான் தனது மகளை கடத்திச் சென்றிருப்பார் என்று நினைத்து சுரேந்தரின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சுரேந்தரின் தாய் முருகம்மாளை வீட்டில் இருந்து கடத்திச் சென்று வனப்பகுதிக்குள் துன்புறுத்தியுள்ளனர்.

மேலும், சுரேந்தர் இருக்கும் இடத்தை சொல்லுமாறு அடித்து துன்புறுத்தி அவரை அரை நிர்வாணப்படுத்தி இருக்கின்றனர். தொடர்ந்து அவர் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில், கடத்தல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அறிந்த அந்த கும்பல், முருகம்மாளை மொரப்பூர் சாலையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

பின்னர், முருகம்மாளை துன்புறுத்தியதாக இளம்பெண்ணின் தாய், தந்தை உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : போலீசாருக்கு காவல் ஆணையர் வார்னிங்..!! பொதுமக்களின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு..!!

Tags :
Advertisement