For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பெரும் சோகம்..!! பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்..!! திரையுலகினர் இரங்கல்..!!

Popular Tamil film producer Dilli Babu passed away
08:41 AM Sep 09, 2024 IST | Chella
பெரும் சோகம்     பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் டில்லி பாபு காலமானார்     திரையுலகினர் இரங்கல்
Advertisement

தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வலம் வரும் நிறுவனம் ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி. இதன் நிறுவனர் ஜி.டில்லி பாபு. கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (செப்.9) அதிகாலை காலமானார். இவருடைய மறைவு திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகினர் பலரும் இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

2015இல் ‘உறுமீன்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் டில்லி பாபு. அதனைத் தொடர்ந்து ’மரகத நாணயம்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’, ‘மிரள்’ மற்றும் ‘கள்வன்’ உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார். இதில், மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் திரைப்படங்அள் நல்ல வரவேற்பை பெற்றனர்.

தற்போது கூட தொடர்ச்சியாக படங்கள் தயாரிப்பதற்கு பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு முன் தொகை கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்தார் டில்லி பாபு. தனது மகனை நாயகனாக்க வேண்டும் என்பது இவருடைய கனவு. ’வளையம்’ என்ற பெயரில் தனது மகன் தேவ் நடிக்க ஒரு படத்தினை தயாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : மீன ராசியில் பயணிக்கும் சனி பகவான்..!! யோகத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்..!!

Tags :
Advertisement