பெரும் சோகம்..!! தமிழ்நாட்டில் இடி மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழப்பு..!!
02:53 PM Nov 04, 2023 IST
|
1newsnationuser6
Tags :
Advertisement
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
தமிழ்நாட்டில் நள்ளிரவில் இருந்து கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், இடி மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை கீரனூரில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற 2 பேர், திண்டுக்கல்லில் மாட்டு கொட்டகையில் மாடுகளை கட்டிக் கொண்டிருக்கும்போது வேல்முருகன் என்பவர், வீட்டின் முன் வைத்திருந்த பொருளை எடுக்க சென்றபோது விஜயலட்சு என்பவர், வயலில் வேலைபார்த்தபோது மகாலிங்கம் ஆகியோர் இடி மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.
Advertisement
Next Article