முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

390+ பேருக்கு அரசுப்பணி!… TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

05:30 AM Mar 11, 2024 IST | 1newsnationuser3
Advertisement

TNPSC ஆணையத்தின் கீழ் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் TNPSC ஆனது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வுகளில் தேர்வானவர்கள் பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் டிஎன்பிஎஸ்சி மூலம் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கடந்த 7ம் தேதி வரை இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிக்கு 219 பேரும், குரூப் 2 பணிகள் அடங்கிய இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு 112 பேரும், இளநிலை அறிவியல் அலுவலர் பதவிக்கு 29 பேரும் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 394 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: பாலியல் புகாரில் சிக்கிய ‘MANJUMMEL BOYS’ இயக்குனர்.!! நடந்தது என்ன.?

Tags :
390+ பேருக்கு அரசுப்பணிgovt jobTNPSC முக்கிய அறிவிப்பு
Advertisement
Next Article