For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! பண மழை கொட்டப்போகுது..!! சூப்பர் அறிவிப்பு..!!

07:23 AM Apr 24, 2024 IST | Chella
அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்     பண மழை கொட்டப்போகுது     சூப்பர் அறிவிப்பு
Advertisement

அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், வீட்டு வாடகைப்படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படிக்கான சீலிங் ரேட்டை மாற்றியமைத்து நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 6 வகையான அகவிலைப்படி 25% வரை உயர்த்தப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தினை கணக்கிட்டு ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது.

மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் புதுவை அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதமாக இருந்த அகவிலைப்படி 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, பல்வேறு அகவிலைப்படியின் சீலிங் ரேட்டினை மாற்றியமைத்து நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. பணியின்போது இறந்த அரசு ஊழியர்களுக்கான சீலிங் ரேட் 25%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் போக்குவரத்துப்படி 25% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல வீட்டு வாடகைப்படியும் சீலிங் ரேட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது எக்ஸ் பிரிவுக்கு 27 சதவீதம், ஒய் பிரிவுக்கு 18, இசட் பிரிவுக்கு 9 சதவீதமாக உள்ளது. தற்போது, எக்ஸ் பிரிவுக்கு 30, ஒய் பிரிவுக்கு 20 சதவீதம், இசட் பிரிவுக்கு 10% ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான கல்வி அகவிலைப்படி மாதம் 2,250 ரூபாய், ஓட்டல் சப்ஸிடி 6,750 ரூபாய், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி அகவிலைப்படி 4,500 ரூபாயாக தற்போதுள்ளது. இவையும் 25% உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், 3,000ஆக இருந்த மாற்றுத்திறனாளி பெண் ஊழியர்களுக்கான அகவிலைப்படியும், உடைக்கான அகவிலைப்படியும் 25% அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றியமைக்கப்பட்ட அகவிலை உயர்வு 01.01.2024 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Smoke biscuit என்றால் என்ன?… எப்படி புகை வருகிறது?… ஏன் உடலை பாதிக்கிறது?

Advertisement