For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கோவிஷீல்டு தடுப்பூசி... இப்போதைக்கு நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது...! அமைச்சர் மா.சு

06:32 AM May 04, 2024 IST | Vignesh
கோவிஷீல்டு தடுப்பூசி    இப்போதைக்கு நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது     அமைச்சர் மா சு
Advertisement

கோவிஷீல்டு தடுப்பூசி வல்லுநர்களின் ஆய்வு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வந்த பிறகுதான் அதுபற்றி நாம் கருத்து தெரிவிக்க முடியும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Advertisement

கொரோன வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்க ஒட்டுமொத்த இந்திய மருத்துவ துறையுமே போராடியது. அஸ்ட்ராஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பூசியை உருவாக்கியது. அந்தவகையில், கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்ப்ட்னிக்-வி, நோவாக்ஸ், பைஃசர் என பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் தான் அதிகம் போடப்பட்டது.

சில நாட்களுக்கு முன் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியால் அரிதாக சில பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதனை உருவாக்கிய ஆஸ்ட்ரஜெனக்கா நிறுவனம் சமீபத்தில் ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியாகியது. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதாக ரத்தம் உறைதல், ரத்தத் தட்டுக்களின் அளவு குறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக ஆஸ்ட்ராஜெனக்கா நிறுவனம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை படுத்தியது. இதையடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், "கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்த நிறுவனம் இதுபற்றி அறிக்கை அளித்துள்ளது. ஆனால், வல்லுநர்களின் ஆய்வு அறிக்கை அதிகாரப்பூர்வமாக வந்த பிறகுதான் அதுபற்றி நாம் கருத்து தெரிவிக்க முடியும் என கூறினார்.

Advertisement