For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு தயவில் ஆட்சி!! ஜூன் 8ல் பதவியேற்கும் பிரதமர் மோடி!!

06:15 AM Jun 06, 2024 IST | Baskar
நிதிஷ்குமார்  சந்திரபாபு நாயுடு தயவில் ஆட்சி   ஜூன் 8ல் பதவியேற்கும் பிரதமர் மோடி
Advertisement

பிரதமர் பதவியை ராஜினாமா செய்த மோடி, மூன்றாவது முறையாக ஜூன் 8ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.

Advertisement

நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள்வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது. அதேநேரம் இண்டியா கூட்டணி 232 இடங்களை வென்றுள்ளது.

இந்நிலையில், மத்தியில் ஆட்சி அமைக்க 272 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 3-வது முறையாக பாஜக ஆட்சியமைக்க உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது பாஜக. இதனைத் தொடர்ந்து பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்தார் . மேலும், 17-வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரை கடிதத்தையும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து அளித்தார். டெல்லியில் ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு நடந்தது.

17-வது மக்களவையை கலைக்கும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடியின் ராஜினாமாவையும் ஏற்றுக்கொண்டார். மேலும் புதிய அரசு அமையும் வரை மோடியை காபந்து பிரதமராக செயல்படுமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், மூன்றாவது முறையாக பிரதமராக மோடி ஜூன் 8ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். வெள்ளிக்கிழமை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் மக்களவையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் மோடி. அதன்பின் அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கிய பின், ஜூன் 8ஆம் தேதி பிரதமராக பதவியேற்றுக்கொள்கிறார்.

Read More: மெக்சிகோவில் புதிய அதிபர் பதவியேற்று 24 மணி நேரம் கூட ஆகல.. நடுரோட்டில் சுட்டுக் கொலை!!

Tags :
Advertisement