For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கூவத்தூர் விவகாரம்..!! ’இன்னும் 24 மணி நேரம் தான் டைம்’..!! அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜுக்கு Trisha எச்சரிக்கை..!!

01:54 PM Feb 22, 2024 IST | 1newsnationuser6
கூவத்தூர் விவகாரம்     ’இன்னும் 24 மணி நேரம் தான் டைம்’     அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ வி ராஜுக்கு trisha எச்சரிக்கை
Advertisement

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு. இவர், அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதிமுகவை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கடும் கண்டனங்களை பதிவு செய்தது.

Advertisement

இந்நிலையில், அவருக்கு நடிகை த்ரிஷா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இந்த விவகாரம் தொடர்பாக, 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், பிரபலமான யூடியூப் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் மன்னிப்பு கேட்கப்பட்ட வேண்டும் எனவும் கூறியுள்ளார். கடந்த 4 நாட்களாக அவதூறு கருத்தினால் மன உளைச்சலில் இருப்பதாகவும், இதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் எந்தெந்த யூடியூப் சேனல்கள், பத்திரிகைகள் மற்றும் சேனல்களில் வந்ததோ அவை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வழக்கறிஞர் நோட்டீஸில் கூறியுள்ளார். மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை மேற்கொள்ளாவிடில் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வழக்கறிஞர் நோட்டீஸ் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Read More : Aadhaar | மாணவர்களே..!! நாளை (பிப்.23) சிறப்பு முகாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!! எதற்கு தெரியுமா..?

Advertisement