முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’பள்ளிக்கு நல்லது நடக்க வேண்டும்’..!! 2 வயது சிறுவனை நரபலி கொடுத்த பள்ளி நிர்வாகம்..!! வெளியான திடுக்கிடும் தகவல்..!!

During the investigation, human sacrifice materials were found near the well. This massacre was staged due to superstition.
03:10 PM Sep 27, 2024 IST | Chella
Advertisement

பள்ளிக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக 2 வயது சிறுவனை பள்ளியின் இயக்குநர், ஆசிரியர்களே இணைந்து நரபலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 2ஆம் வகுப்பு மாணவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செப். 22ஆம் தேதி இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. பள்ளி விடுதியில் தங்கியிருந்த சிறுவனை 3 பேர் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கின்றனர். சிறுவனை நரபலி கொடுக்க முயன்ற போது இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், "இவர்கள் கடந்த செப்.6ஆம் தேதியே இதற்கு முயற்சி செய்துள்ளனர். வேறு ஒரு சிறுவனை அப்போது நரபலி கொடுக்க திட்டமிட்டிருந்தனர். இருப்பினும், அந்த சிறுவன் திடீரென கத்தியதால் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டனர். இப்போது அந்த சிறுவனுக்கு நாங்கள் நடத்திய மருத்துவ சோதனையில் பல இடங்களில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த செப். 22ஆம் தேதி மீண்டும் அவர்கள் நரபலி சடங்கை முயன்றுள்ளனர். பள்ளியின் பின்புறமுள்ள ஒரு கிணற்றின் அருகே பலியிட முடிவு செய்திருக்கின்றனர். தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை அங்குத் தூக்கிச் சென்றுள்ளனர். இருப்பினும், செல்லும் வழியிலேயே அந்த சிறுவன் விழித்துக் கொண்டான். இதனால் அச்சமடைந்து பள்ளியிலேயே வைத்து அந்த சிறுவனைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர்” என்றார்.

விசாரணையில் கிணற்றுக்கு அருகில் நரபலி கொடுக்க வைத்திருந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூடநம்பிக்கை காரணமாகவே இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த பள்ளி கடந்த சில காலமாகவே நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்துள்ளது. பள்ளிக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக யாரோ சொன்னதைக் கேட்டு நரபலி கொடுக்க முயன்றதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக பள்ளியின் இயக்குநர், அவரது தந்தை, ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். நரபலி கொடுக்க முயன்ற போது இந்த கொலை நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read More : கிளி மாதிரி பொண்டாட்டியை வெச்சிக்கிட்டு மச்சினிச்சியை கர்ப்பமாக்கிய முன்னணி நடிகர்..!! யாருன்னு தெரியுதா..?

Tags :
2 வயது சிறுவன்உத்தரப்பிரதேச மாநிலம்நரபலி
Advertisement
Next Article