முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!… பழைய பென்சன் திட்டத்தில் வாய்ப்பு!… நவ.30 வரை காத்திருங்கள்!

07:12 AM Nov 14, 2023 IST | 1newsnationuser3
Advertisement

பல்வேறு மாநிலங்களில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி மத்திய, மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய பென்சன் திட்டம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இதற்கிடையில் ஒரு சில மாநில அரசுகள் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியுள்ளன. காங்கிரஸ் ஆளும் பல மாநிலங்களில் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தவிர, ஓய்வு பெற்ற ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ஆம் தேதிக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. அகில இந்தியப் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளுக்கு, ஜூலை மாதம் தேர்வின் பலன் வழங்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு நவம்பர் 7ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் மத்திய பணியாளர்கள் விருப்பத்தை தேர்வு செய்ய ஆணையம் அவகாசம் வழங்கியது. இதன்படி நவம்பர் 30ஆம் தேதிக்குள் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.

இது தொடர்பாக கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் கட் ஆஃப் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட மேல்முறையீடுகளைக் கருத்தில் கொண்டு இறுதி முடிவை எடுக்க நவம்பர் 30ஆம் தேதி வரை கட்-ஆஃப் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவின்படி, மத்திய அரசு அரசு ஊழியர் ஓய்வூதிய விதிகள், 1972ன்படி, 2023 டிசம்பர் 22ஆம் தேதிக்கு முன் மத்திய அரசுப் பணிகளில் அறிவிக்கப்பட்ட பதவிகளில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து மாற விருப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் விருப்பத்தைத் தேர்வுசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆணை 2023 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் ஆர்டர் வருவதற்கு முன்பே ஓய்வு பெற்ற சில ஊழியர்களும் உள்ளனர். ஓய்வுக்குப் பிறகு பழைய பென்சன் திட்டத்தில் சேர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி அவர்களிடம் உள்ளது.

இது தவிர புதிய பென்சன் திட்டத்தில் இணைந்த அகில இந்திய பணி அலுவலர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 2023 ஜூலை 13ஆம் தேதியன்று மத்திய அரசு ஒரு உத்தரவை வெளியிட்டது. 2003 டிசம்பர் 22 அன்று புதிய பென்சன் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு நியமிக்கப்பட்ட அகில இந்தியப் பணி அலுவலர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேரத் தகுதியுடையவர்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

2004 ஜனவரி 1ஆம் தேதிக்குப் பிறகு, AIS விதிகள் 1958ன் கீழ், பழைய ஓய்வூதியத் திட்ட விதிகளின் விருப்பத்தை சேவையில் உள்ள அதிகாரிகளுக்கு வழங்கலாம். ஆனால், அதற்கு அவர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும், அவர்கள் 2023 நவம்பர் 30ஆம் தேதிக்குள் விருப்பத்தைத் தெரிவிக்க வேண்டும். மத்திய அரசு அதிகாரிகள், AIS அதிகாரிகள் உள்ளிட்ட ஓய்வுபெற்ற ஊழியர்களும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலனைப் பெறலாம். இதற்கு அவர்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவது கட்டாயமாகும். இது தொடர்பான உத்தரவு நவம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Old Pension Planஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வாய்ப்புநவ.30 இறுதி உத்தரவுபழைய பென்சன் திட்டம்
Advertisement
Next Article