For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு..!! பொதுமக்கள் ஹேப்பி..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Radhakrishnan, Principal Secretary of the Cooperative Department, has informed that steps are being taken to provide small grains in Tamil Nadu ration shops.
11:35 AM Aug 21, 2024 IST | Chella
ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு     பொதுமக்கள் ஹேப்பி     வெளியான சூப்பர் அறிவிப்பு
Advertisement

தமிழ்நாட்டில் உள்ளிட்ட ரேஷன் கடைகள் மூலம் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், மானிய விலையில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வசதிக்காக ரேஷன் கடைகளில் பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Advertisement

இந்நிலையில், தமிழக ரேஷன் கடைகளில் சிறு தானியங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார். வெளிமாநிலங்களில் இருந்து கேழ்வரகு கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்த அவர், அனைத்து ரேஷன் கடைகளிலும் தட்டுப்பாடின்றி பாமாயில் வழங்கப்படுவதாக கூறினார்.

மேலும், ரேஷன் கடைகளுக்கு ஒரே கிழமையில் வார விடுமுறை அளிப்பது குறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தேங்காயை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டுமென தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More : கிருஷ்ணகிரியில் மேலும் 13 மாணவிகள் பாலியல் பலாத்காரம்..? தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு..!!

Tags :
Advertisement