For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

கர்ப்பிணி பெண்களுக்கு செம குட் நியூஸ்..!! இனி ரூ.14,000 பெறுவது ரொம்ப ஈசி..!!

10:16 AM Mar 26, 2024 IST | Chella
கர்ப்பிணி பெண்களுக்கு செம குட் நியூஸ்     இனி ரூ 14 000 பெறுவது ரொம்ப ஈசி
Advertisement

ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய மாற்றங்களுடன் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் நீண்ட காலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணிகள் கருத்தரித்த 12 வாரத்திற்குள் ஆரம்ப சுகாதார செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு எண் விவரங்களை தெரிவித்து, பெயரை பதிவு செய்து, ’பிக்மி' எண் பெற வேண்டும். அப்படி பதிவு செய்யும் கர்ப்பிணி பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் வரவு வைக்கப்படும். 4-வது மாதத்துக்கு பிறகு, இரண்டாவது தவணையாக ரூ.2,000 வழங்கப்படும்.

மேலும், ரூ.2,000 மதிப்புள்ள பெட்டகங்கள் அரசு சார்பில் இரண்டு முறை வழங்கங்படும். பின்னர் அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்த பிறகு, 3-வது தவணையாக ரூ.4,000, பேறு காலம் முடிந்து குழந்தைக்கு தடுப்பூசி போடும் காலத்தில் 4-வது தவணையாக ரூ.4,000, குழந்தைக்கு 9-வது மாதம் முடிந்தவுடன் ஐந்தாவது தவணையாக ரூ.2,000 என மொத்தம் ரூ.14,000 ரொக்கம் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும். அதேபோல் மொத்தம் ரூ.4,000 மதிப்புள்ள பெட்டகம் வழங்கப்படும். அதாவது 140000 + 4000 என அரசு வழங்கி வந்தது.

இந்த திட்டம் சரிவர அமல்படுத்தப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. ஒரு சிலருக்கு 4000 வரையிலும், ஒரு சிலருக்கு 8000 ஆயிரம் வரையிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கிடைத்து வந்தது. ஆனால், கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிதியுதவி யாருக்கும் கிடைப்பது இல்லை என்றும், அதற்கு காரணம் கேட்டால், பதிவு செய்த பெயரும், ஆதாரில் உள்ள பெயரும் பொருந்தவில்லை என்பது உள்ளிட்ட காரணங்களை கூறி அதிகாரிகள் நிராகரிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.11,702 கோடி நிதி 1.14 கோடி பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், பிரதம மந்திரி மாத்ருவந்தனா யோஜனா திட்டத்தின்நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் தற்போது சில மாற்றங்களை அரசு செய்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய மாற்றங்களுடன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதாவது, தற்போது வரை ஐந்து தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூ.14,000 நிதியுதவி இனி மூன்று தவணைகளில் வழங்கப்படும். எப்படி என்றால், கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6 ஆயிரமும், குழந்தை பிறந்த 9-வது மாதத்தில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்படும். பேறு காலத்தில் மூன்றாவது மாதத்தில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும். அதேபோல் ஆறாவது மாதத்தில் ஒரு முறை ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

Read More : EPFO கணக்கில் இருந்து பணம் எடுப்பதில் சிக்கலா..? நிறுவனம் மாறும்போது இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க..!!

Advertisement