For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்..!! இனி உங்களுக்கும் ரூ.1,000 கிடைக்கப்போகுது..!!

Out of 2,89,591 applications for new ration cards in Tamil Nadu, 80,050 new ration cards have been distributed so far. Delivery to the rest is in progress.
10:44 AM Sep 26, 2024 IST | Chella
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ்     இனி உங்களுக்கும் ரூ 1 000 கிடைக்கப்போகுது
Advertisement

தமிழ்நாட்டில் புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட 2,89,591 விண்ணப்பங்களில் இதுவரை 80,050 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கும் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

குடும்பத்தினருக்கு அத்தியாவசிய அடிப்படை அடையாள அட்டைகளில் ஒன்றாக ரேஷன் கார்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் பல முக்கியமான சலுகைகளை பெற ரேஷன் அட்டையே பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக மகளிர் உரிமைத்தொகை, நிவாரணத் தொகை, பொங்கல் பரிசுத்தொகுப்பு உள்ளிட்ட பணிகளுக்கு உதவுகிறது. படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 ரேஷன் அட்டைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

மகளிர் உரிமைத்தொகை காரணமாக ரேஷன் கார்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் அட்டைகள் கிடைக்காமல் இருந்தது. இதனைத் தொடர்ந்து, புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன. அதன்படி, 2024 மார்ச் மாதம் 45 ஆயிரத்து 509 குடும்ப அட்டைகள் விநியோகம் செய்யப்பட்டது.

ஆனால், லோக்சபா தேர்தல் காரணமாக மீண்டும் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவது நிறுத்தப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு ரேஷன் கார்டுகளை வழங்கும் பணிகள் தொடங்கின. அதன்படி, புதிதாக ரேஷன் கார்டு கேட்டு வந்த 2,89,591 விண்ணப்பங்களில், 1,22,00 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் 80,050 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு விட்டது. இதில், கிட்டத்தட்ட 1 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மேலும் 68,291 விண்ணப்பங்களை சரிபார்க்கும் மற்றும் கள ஆய்வுகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

விரைவில் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தற்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் கூறியிருப்பதால், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதிதாக ரேஷன் கார்டு கிடைக்கப்பெற்றால், தகுதியான விண்ணப்பதார்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கும் விண்ணப்பிக்க முடியும்.

Read More : ’எனக்கு நீ தான் வீடு கட்டித் தரணும்’..!! பெண் ஆர்கிடெக்சருக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்..!! கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!!

Tags :
Advertisement