முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி..!! இன்று வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!!

An announcement on the increase in the dearness allowance of central government employees is expected to be released today.
07:35 AM Sep 25, 2024 IST | Chella
Advertisement

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை அதிகரிப்பது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3- 4% உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு கோடி குடும்பங்களுக்கு நேரடி பலனை அளிக்கும். இதுவரை 8-வது ஊதியக் குழுவை அமைக்காதது பலருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்நிலையில் தான், அரசு ஊழியர்களின் கோபத்தை தணிக்கும் விதமாக விரைவில் டிஏ உயர்வு அறிவிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

DA அதிகரிப்புக்கான தேதியை அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இன்று அந்த அறிவிப்பு வரலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. DA 3- 4% உயர்ந்தால், அது 53 அல்லது 54% ஆக அதிகரிக்கும். இது தற்போதைய 50% இல் இருந்து குறிப்பிடத்தக்க உயர்வு ஆகும். உதாரணமாக, ஒருவர் மாதம் ரூ.50,000 சம்பாதித்தால், அவர் ஒவ்வொரு மாதமும் ரூ.1,500 அதிகமாகப் பெறுவார்.

அதாவது, 51,500 ரூபாய் சம்பளம் பெறுவார். இன்று இது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின் இது தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இது போக ஒருங்கிணைந்த பென்சன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு கீழ் பென்சன் மட்டுமன்றி அகவிலைப்படியும் சேர்ந்து வழங்கப்படும்.

Read More : ஆண்களே..!! இந்த உணவை நோட் பண்ணிக்கோங்க..!! எல்லா விஷயத்துக்கும் இது போதும்..!!

Tags :
அரசு வேலைசம்பள உயர்வுமத்திய அரசு ஊழியர்கள்
Advertisement
Next Article