முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.57 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்...!

Gold worth Rs 1.57 crore seized at Chennai airport.
09:11 AM Jul 24, 2024 IST | Vignesh
Advertisement

சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 1.57 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், 21.07.2024 அன்று குவைத்தில் இருந்து சென்னை திரும்பிய பயணியை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரிடமிருந்து ரூ. 1.57 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று வெள்ளை நிற பொட்டலங்களில் தங்கத்தை வைத்து அதனை இடுப்பில் மறைத்து நூதன முறையில் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

2398 கிராம் எடையுடைய பசை வடிவிலான அந்த தங்கம் 24 கேரட் வகையைச் சார்ந்ததாகும். இதையடுத்து கைது செய்யப்பட்ட பயணியை ஆலந்தூர் நீதிமன்றத்தில் அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்த மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags :
chennai airportGoldGold smugglingpuzhal jail
Advertisement
Next Article