முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Gold Rate | புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை..!! ஒரு சவரன் ரூ.53,000-ஐ கடந்தது..!!

10:28 AM Apr 08, 2024 IST | Chella
Advertisement

தங்கம் விலை இன்று ஒரே நாளில் 360 ரூபாய் உயர்ந்துள்ளதால், ஒரு சவரன் 53,280-க்கு விற்பனையாகிறது.

Advertisement

தென்னிந்திய அளவில் அதிக தங்கம் வைத்துள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதற்கு காரணம், தங்க நகை மீது பெண்களுக்கு இருக்கும் மோகம் தான். ஒரு காலத்தில் பூக்களோடு பொன்னை ஒப்பிட்டார்கள். ஆனால், இப்போது அப்படியெல்லாம், ஒப்பிட முடியாத அளவிற்கு வரலாறு காணாத விலையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை (ஏப்.6) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,615க்கும் , சவரன் ரூ.52,920க்கும் விற்பனையானது. இதனால் தங்கம் விலை ரூ.53,000-ஐ நெருங்கும் நிலையில் சாமானியர்கள் கலக்கம் அடைந்தனர்.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.360 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்க நகை ரூ.53,280-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ரூ.6,660-க்கும் விற்பனையாகிறது. வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நகை விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Read More : செம குட் நியூஸ்..!! மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை..!!

Advertisement
Next Article