முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Gold | வரலாற்றில் புதிய உச்சம்..!! ரூ.51,000 தாண்டியது ஒரு சவரன் தங்கம்..!! சாமானிய மக்கள் அதிர்ச்சி..!!

10:13 AM Mar 29, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரே நாளில் 1,120 ரூபாய் உயர்ந்து, 51 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

தங்கத்தின் விலை கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. நேற்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து, 6,250 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 50,000 ரூபாயை எட்டி புதிய உச்சம் பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் கிராமுக்கு 140 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,390 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,120 ரூபாய் அதிகரித்து 51,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலை ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 80 ரூபாய் 80 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி 80,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read More : செம ஜாலி..!! இறுதித்தேர்வு அட்டவணையில் அதிரடி மாற்றம்..!! மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை..!!

Advertisement
Next Article