For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Gokula Indira | ’கூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் அதிமுக போட்டி’..!! மாஜி அமைச்சர் கோகுல இந்திரா பரபரப்பு பேட்டி..!!

02:59 PM Feb 21, 2024 IST | 1newsnationuser6
gokula indira   ’கூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் அதிமுக போட்டி’     மாஜி அமைச்சர் கோகுல இந்திரா பரபரப்பு பேட்டி
Advertisement

பாஜகவை வளர்ப்பதற்காக அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளை அண்ணாமலை விமர்சிப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

Gokula Indira | மத்திய சென்னை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடக் கோரி முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விருப்ப மனு அளித்தார். அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமிக்காக விருப்ப மனு அளித்தார் கோகுல இந்திரா. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெயலலிதாவை அண்ணாமலை விமர்சித்ததால் கூட்டணியை முறித்துள்ளோம்.

அதிமுக கிளைக்கழகம் முதல் படிப்படியாக வளர்ந்த கட்சி, சிலர் நேற்று திருமணம் செய்து இன்றே குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள். அண்ணாமலையின் செயல்பாடுகள் பாஜகவை அவர் தவறாக வழிநடத்திச் செல்வதை போல் தெரிகிறது. பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அதனை பயன்படுத்தி வெற்றி பெறலாம் என சிலர் இருந்தார்கள். தற்போது அதிமுக கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டதால் தற்போது பா.ஜ.க. கூட்டணிக்கு செல்ல கட்சிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமையாவிட்டால் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட அதிமுக ஆயத்தமாகி வருகிறது. கூட்டணி அமையாவிட்டால் 40 தொகுதிகளிலும் இரட்டை இலை இருக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்” என்று கோகுல இந்திரா தெரிவித்துள்ளார். பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினாலும் முடிவு எட்டப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : Trisha | கூவத்தூர் த்ரிஷா விவகாரம்..!! பொங்கி எழுந்த எடப்பாடி பழனிசாமி..!!

Advertisement