முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நல்லது பண்ண போய் இப்படி சிக்கிடீங்களே..! பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை தாக்கியா பாஜக பிரமுகர் கைது..!

09:11 AM Nov 04, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

சென்னையில் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களை பெண் ஒருவர் தட்டிக்கேட்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில் சென்னையில் ஒரு அரசு பேருந்தில் மாணவர்கள் படிக்கிட்டில் ஆபத்தாக நின்றதுடன், படிக்கட்டு அருகே உள்ள ஜன்னலில் ஏறி ஆபத்தாக பயணித்திருந்தனர், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் அந்த பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் நடத்துனரை கண்டபடி வார்த்தைகளால் திட்டி விட்டு, ஆபத்தான முறையில் பயணம் செய்த மாணவர்களை கடுமையாக தாக்கினார்.

Advertisement

இதில் அவர் மாணவர்களுக்கு நல்லது செய்தாலும், ஏன் அவர் காவல்துறையினரை அழைக்காமல் மாணவர்களை கண்டபடி தாக்கியுள்ளார், யார் இவருக்கு இவ்வளவு அதிகாரம் கொடுத்தது என்றும், இப்படி இவரே சட்டத்தை கையில் எடுத்தால் காவல் துறை எதற்கு என்று, இவர் மீது கண்டனங்கள் எழுந்தது. மேலும் இது தொடர்பாக போலீஸில் புகாரும் அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து 5பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில், பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை தாக்கிய நடிகையும், பாஜக பிரமுகருமான ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை கெரும்கம்பாக்கத்தில் உள்ள ரஞ்சனா நாச்சியார் வீட்டில் மாங்காடு போலீஸார் விசாரணை நடத்தியதை அடுத்து அவரை கைது செய்தனர். கைது செய்ய வாரண்ட் எங்கே என கேட்ட ரஞ்சனா நாச்சியாரிடம் முதல் தகவல் அறிக்கை பதிவாகிவிட்டதால் வாரண்ட் தேவையில்லை என கூறியபடி போலீஸார் கைது செய்தனர்.

Tags :
ranjana natchiyar bjpமாணவர்களை தாக்கியா பாஜக பிரமுகர்ரஞ்சனா நாச்சியா
Advertisement
Next Article