For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

குளுகுளு நியூஸ்..!! நாளை முதல் ஆரம்பம்..!! மக்கள் மகிழ்ச்சி..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன நல்ல செய்தி..!!

07:41 AM Apr 06, 2024 IST | Chella
குளுகுளு நியூஸ்     நாளை முதல் ஆரம்பம்     மக்கள் மகிழ்ச்சி     வானிலை ஆய்வு மையம் சொன்ன நல்ல செய்தி
Advertisement

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் வரும் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால், கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. மக்களும் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 7ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 3 நாட்கள் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இன்று (ஏப்.6) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நாளை (ஏப்.7) கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 8ஆம் தேதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 9ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 10, 11ஆம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read More : கொரோனாலாம் சும்மா..!! கொடிய வைரஸாக மாறும் H5N1..!! மரணம் உறுதி..!! மருத்துவர்கள் பகீர்..!!

Advertisement