முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கிளாமர் கதைக்கு தேவைப்பட்டால் நடிப்பேன் என்ற பிரபலம்......

09:15 AM May 17, 2024 IST | shyamala
Advertisement

முத்தக்காட்சி, படுக்கையறை காட்சிகளில் நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை  என்றும் நடிகை சாய் தன்ஷிகா சஸ்பென்ஸ் கொடுத்துள்ளார்.

மனதோடு மழைக்காலம் படத்தில் அறிமுகமான தன்ஷிகா, பேராண்மை' படத்தில் கல்லூரி மாணவியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். அதனை தொடர்ந்து சில கமர்சியல் படங்களில் நடித்தவர் ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவான "கபாலி" படத்தில் ரஜினியின் பெண்ணாக நடித்து பலரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றார்.

Advertisement

தஞ்சையில் பிறந்த தன்ஷிகா, சாய்பாபா மீது கொண்ட பக்தி காரணமாக தன் பெயரை சாய் தன்ஷிகா என மாற்றிக்கொண்டார். தற்போது 'தி புரூப்' என்ற படத்தில் அதிரடி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சாய் தன்ஷிகா.

கிளாமர் படங்களில் நடிப்பதில் தனக்கு அதிக விருப்பமில்லை என்று சொல்லி வரும் சாய் தன்ஷிகா, கதைக்கு தேவைப்பட்டால் நடிப்பேன் என்றும் சொல்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் " பொதுவாக கிளாமர் வேடங்களில் நடிக்கமாட்டேன். ஏனெனில் கிளாமருக்கு நான் செட் ஆகமாட்டேன் என்றும், சிலர் கிளாமரை அழகாக காட்டுவார்கள். சிலர் அதை வலுக்கட்டாயமாக திணிப்பார்கள் என்றார். ஆனால் `தி புரூப்' படத்தில் அழகான கிளாமர் என்பதால் அப்படி நடித்திருக்கிறேன். கவர்ச்சியாக நடிப்பது என்பதெல்லாம் கதையை பொறுத்து அதுவாக அமைய வேண்டும் என்று கூறினார்.

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்..!! மக்களே பாதுகாப்பா இருங்க..!!

Advertisement
Next Article