முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

சரும பிரச்சனையா.? கவலை வேண்டாம்.! இழந்த பொலிவை மீண்டும் பெற இது ஒன்னு போதும்.!

05:50 AM Dec 23, 2023 IST | 1newsnationuser4
Advertisement

சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பது அனைவரின் விருப்பமான ஒன்று. இதற்காக பலர் பெரும் அளவில் பொருட்செலவும் செய்வார்கள். எனினும் நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் சில பொருட்கள் சருமத்தின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் அப்படிப்பட்ட ஒரு பொருளை இந்த பதிவில் காணலாம்.

Advertisement

பாலில் இருந்து எடுக்கப்படும் சுத்தமான நெய் வைட்டமின்கள், நல்ல கொழுப்பு மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் பெருமளவில் கொண்டிருக்கிறது. இவை நம் முகப்பொலிவிற்கும் சரும ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமம் வறண்டு போயிருந்தால் சிறிதளவு சுத்தமான நெய்யை எடுத்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து வர முகம் பொலிவடையும் வறட்சி மற்றும் சுருக்கங்கள் மறைந்து போகும். முகத்தில் அதிக சுருக்கம் இருந்தால் நெய்யை தேய்த்து சிறிது நேரம் உலற விட்ட பின் முகத்தை கழுவினால் சுருக்கங்கள் மறைந்து முகம் பளிச்சிடும்.

குளிப்பதற்கு முன் முகம் மற்றும் கை கால்களில் நெய்யை தேய்த்து நன்றாக மசாஜ் செய்தால் கை கால்களில் இருக்கும் சுருக்கம் மற்றும் பணி காலங்களில் ஏற்படும் தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உதட்டில் நெய் தேய்த்து வர உதட்டில் இருக்கும் வெடிப்புகள் குணமாகுவதோடு உதடு பளபளப்பாகும். கண்களில் இருக்கும் கருவளையத்திற்கும் நெய் சிறந்த மருந்தாக இருக்கிறது. இதனை கண்களை சுற்றி தேய்த்து வந்தால் கருவளையங்கள் மறையும். சிலருக்கு முகம் வயதான தோற்றத்தை கொடுக்கும். இவர்கள் தினமும் நெய் தேய்த்து முகத்தை கழுவி வர இளமையான தோற்றம் கிடைக்கும்.

Tags :
Beauty TricksGheeglowing skinhealthy lifelife style
Advertisement
Next Article