For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’இனி உணவு பொட்டலங்களில் தயாரிப்பு தேதி, நேரத்தை குறிப்பிட வேண்டும்’..!! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

11:50 AM Nov 16, 2023 IST | 1newsnationuser6
’இனி உணவு பொட்டலங்களில் தயாரிப்பு தேதி  நேரத்தை குறிப்பிட வேண்டும்’     உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Advertisement

ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் உயிரிழந்த வழக்கில், உணவு பொட்டலங்களில் தயாரிப்பு தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டும் என்று கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கேரளாவில் கடந்த ஆண்டு 'ஷவர்மா' சாப்பிட்ட 16 வயது இளம்பெண், திடீரென உயிரிழந்தார். கெட்டுப்போன பொருட்களால் ஷவர்மா தயாரித்ததால் தனது மகள் இறந்ததாக அப்பெண்ணின் தாயார் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், 'உணவு பொட்டலங்களில் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டும் என்றும், இதற்கான விழிப்புணர்வை அனைத்து உணவகங்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், உணவு பாதுகாப்பு ஆணையர் அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், இந்த வழிகாட்டுதல்களை மீறும் உணவகங்கள் தேவையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

Tags :
Advertisement