முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வரும் 12-ம் தேதி காலை 10.30 மணி முதல்...! கூட்டுறவுச் சங்க பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு...!

From 10.30 am on the 12th...! Important Notice for Co-operative Societies Employees
07:07 PM Jul 10, 2024 IST | Vignesh
Advertisement

சென்னை மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கான பணியாளர் நாள் நிகழ்வு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கான பணியாளர் நாள் நிகழ்வு 12.07.2024 அன்று முற்பகல் 10.30 மணியளவில், எண்.215, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை-600 108 என்ற முகவரியில் அமைந்துள்ள, சென்னை மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைமையகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளதாக, சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது; 2024-2025-ஆம் ஆண்டுக்கான கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கையின் போது கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களால் "கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளர்களின் குறைகளைத் தீர்வு செய்திடும் வகையில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்வு நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அவர்களின் கட்டுப்பாட்டில், சென்னை மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் தங்களது குறைகளை பணியாளர் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article