For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அண்ணனின் திருமணத்திற்கு பார்ட்டி கொடுத்த தம்பி..!! மதுவை ஊற்றிக் கொடுத்து சுத்துப் போட்ட நண்பர்கள்..!! பயங்கரம்..!!

Gokul's 5 friends, who were intoxicated, drank alcohol together and stabbed Gokul with a knife and fled from there.
10:30 AM Sep 11, 2024 IST | Chella
அண்ணனின் திருமணத்திற்கு பார்ட்டி கொடுத்த தம்பி     மதுவை ஊற்றிக் கொடுத்து சுத்துப் போட்ட நண்பர்கள்     பயங்கரம்
Advertisement

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல். இவரது அண்ணன் ரங்கராஜ். இவருக்கு, திருமணம் நடைபெறவிருந்த நிலையில், அவரது தம்பி கோகுல், தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியுள்ளார். ஏற்கனவே கோகுலுக்கும் அவரது நண்பர்களுக்கும் இடையே பணி செய்யும் இடத்தில் அதிக ஒலி எழுப்பி பாடல் வைப்பது குறித்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Advertisement

அண்ணனின் திருமணத்திற்காக நண்பர்களை அழைத்து மது விருந்து வைத்திருந்த நிலையில், பழைய முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு, மதுபோதையில் இருந்த கோகுலை நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து மது அருந்தி விட்டு அனைவரும் ஒன்று சேர்ந்து கோகுலைக் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். வயிற்றில் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்த கோகுல், பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், காலையில் மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தம்பி கோகுல் கிருஷ்ணன் எங்கே போனார்? போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கவலையடைந்த பெற்றோர், மூத்த மகனின் திருமணத்தை ஒருவேளையாக நடத்தி முடித்துள்ளனர். பின்னர் இது குறித்து போலீசாரிடம் புகார் தெரிவிக்கையில், காணாமல் போன கோகுல் கிருஷ்ணன் குறித்த விசாரணையில், தம்பி கோகுல் உயிரிழந்தது குடும்பத்தினருக்கு தெரியவந்தது.

இதுகுறித்த விசாரணையில் இறங்கிய போலீசார், கோகுலைக் கொலைச் செய்த அவரது நண்பர்களான நாகராஜ், பிரவீன்குமார் உள்ளிட்ட 5 பேரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அண்ணனின் திருமணத்திற்கு வாழ்த்த குவிந்திருந்த உறவினர்கள், கோகுல் கொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு சோகத்தில் மூழ்கினர். திருமண வீடு, நெருங்கிய நண்பர்களாலேயே துக்க வீடாக மாறியது.

Read More : மக்களே டைம் இல்ல..!! உடனே இந்த வேலையை முடிச்சிருங்க..!! இல்லையென்றால் என்ன ஆகும் தெரியுமா..?

Tags :
Advertisement