ஆதார் இணைக்காவிட்டாலும் இலவச ரேஷன் திட்டம் மூலம் பலன்களைப் பெற பெறலாம்...! முதல்வர் அறிவிப்பு...!
பாஜக தலைமையிலான மத்திய அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வைத்துள்ளார், மாநிலத்தில் உள்ள மக்களின் ஆதார் அட்டைகளை அரசாங்கம் முடக்கம் செய்து வருவதாகக் கூறினார், இதனால் மாநில அரசின் திட்டங்களின் பலன்களை அவர்கள் வங்கிக் கணக்குகள் மூலம் பெற முடியாத சூழல் உருவாகும் என தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பிர்பூமில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மத்திய அரசின் தந்திரங்களை தனது அரசாங்கத்தின் இயல்பான செயல்பாடுகளைத் தடுக்க முடியாது, மாநில அரசின் நலத் திட்டங்களின் பலன்களை மக்கள் தொடர்ந்து பெறுவார்கள் செய்வார்கள் என்றும் கூறினார்.
பாஜக தலைமையிலான அரசு ஆதார் அட்டைகளை செயலிழக்கச் செய்கிறார்கள். வங்காளத்தின் பல மாவட்டங்களில் பல ஆதார் அட்டைகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆதார் அட்டைகளை இணைத்து, தேர்தலுக்கு முன்பு மக்கள் வங்கிகள், இலவச ரேஷன் திட்டம் மூலம் பலன்களைப் பெற முடியாத சூழல் உருவாகும். ஆனால், ஆதார் அட்டை இல்லாவிட்டாலும் திட்டங்களின் பயனாளிகளுக்கு நாங்கள் தொடர்ந்து பணம் செலுத்துவோம். ஒரு பயனாளியும் பாதிக்கப்பட மாட்டார்கள் என கூறினார்.