For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"55 வயது நபரால் பலாத்காரம் செய்யப்பட்ட '4' வயது சிறுமி.." அங்கன்வாடியில் நடந்த கொடூரம்..!!

04:48 PM Jan 31, 2024 IST | 1newsnationuser7
 55 வயது நபரால் பலாத்காரம் செய்யப்பட்ட  4  வயது சிறுமி    அங்கன்வாடியில் நடந்த கொடூரம்
Advertisement

ஆந்திர மாநிலத்தில் அங்கன்வாடியைச் சேர்ந்த 4 வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் அன்னமையா பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடியில் பணியாற்றும் ஆசிரியரை பார்ப்பதற்காக ரெட்டப்பா என்ற 55 வயது நபர் வந்திருக்கிறார்.

Advertisement

அவரிடம் குழந்தைகளை சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு ஆசிரியை வெளியே சென்று இருக்கிறார். இந்நிலையில் ஆசிரியை இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ரெட்டப்பா அங்கன்வாடி மையத்தைச் சார்ந்த 4 வயது பெண் குழந்தையை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மதியம் வீடு திரும்பிய சிறுமி உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பதை கண்ட பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சடைந்தனர். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ரெட்டப்பா கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement