முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் தற்கொலை..!! சித்ரவதை காரணமா..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

05:11 PM Dec 07, 2023 IST | 1newsnationuser6
Advertisement

சீன வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் கின் காங் உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் அல்லது சித்ரவதை காரணமாக உயிர் பிரிந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சீன வெளியுறவு அமைச்சராக இருந்த கின் காங் திடீரென மாயமானார். அவரை பற்றிய எந்த செய்தியும் வெளியாகவில்லை. ஆனால், ஜூலை மாதம் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானது.

Advertisement

இந்நிலையில், கின் காங்கிற்கு திருமணத்தை தாண்டிய உறவு இருந்ததாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடந்து வந்ததாகவும், அதற்கு அவர் ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டது. சீன கம்யூனிஸ்ட் சார்பில் நடந்த உட்கட்சி விசாரணையில், கின் காங் அமெரிக்க தூதராக இருந்த போது, திருமணத்தை தாண்டிய உறவில் இருந்தது உறுதியானதாகவும், அதன் மூலம் ஒரு குழந்தை உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் கின் காங் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், அங்கு உயிரிழந்துவிட்டதாகவும் சீன உயர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது. கின் காங் தற்கொலை செய்திருக்கலாம் அல்லது சித்ரவதை காரணமாக உயிர் இழந்திருக்கலாம் எனவும் அந்நாட்டில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :
கின் காங்சீனாதற்கொலைவெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர்
Advertisement
Next Article