முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’உங்கள நம்பி வீட்டுக்குள்ள விட்டதுக்கு’..!! மனைவியுடன் உல்லாசம்..!! வீடியோ எடுத்து மிரட்டிய தொழிலாளர்கள்..!!

The incident of threatening the workers by taking a video of the boss's being together with his wife has created a stir
01:43 PM Oct 21, 2024 IST | Chella
Advertisement

முதலாளி மனைவியுடன் ஒன்றாக இருந்ததை வீடியோ எடுத்து தொழிலாளர்கள் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான நெட்டா பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் சுற்றுலா வேன் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனம் வைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்த வாகனங்களுக்கு ஓட்டுநர்களாக சங்கீத் (28), மற்றும் மிதுன் (26) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். வெகு நாட்களாக இருவரும் தங்களிடம் வேலை பார்த்து வந்ததால், அந்த தம்பதியினர் இரண்டு இளைஞர்களையும் முழுமையாக நம்பி, தங்களது உறவினர்கள் போல் நினைத்து தங்களது வீட்டிற்குள் இயல்பாக வந்து செல்லும் அளவிற்கு பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் தான், கடந்த சில தினங்களுக்கு முன் இளைஞர்கள் இருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக தம்பதியினரிடம் தகராறில் ஈடுபட்டு வேலையை விட்டு சென்றுள்ளனர். இவர்கள் வேலையை விட்டு சென்ற சில நாட்களில் தம்பதியினரின் செல்போன் வாட்ஸ்அப் எண்ணிற்கு புதிய எண்ணில் இருந்து ஒருமுறை பார்த்ததும் அழியக்கூடிய நிலையில் வீடியோ ஒன்று வந்திருக்கிறது.

இதை அவர்கள் ஓபன் செய்து பார்த்தபோது, அதில் தம்பதியினர் இருவரும் உல்லாசமாக இருக்கும் வீடியோ இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதியின,ர் இந்த வீடியோ அனுப்பிய நபர் யார் என்று விசாரித்துள்ளனர். ஆனால், அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையே, அவர்களது வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவரது செல்போன் வாட்ஸ்அப்பிலும் அதே வீடியோ வந்துள்ளது.

இதனை கண்ட அந்த நபர், அந்த வீடியோ தனது செல்போனில் அனுப்பியது உங்களிடம் வேலை பார்த்து வந்த சங்கீத் என்று கூறியுள்ளார். காரணம் அந்த வீடியோ வந்த எண் அவருடைய போனில் ஏற்கனவே பதிவாகி இருந்துள்ளது. இதனை கொண்டு உறுதி செய்த அவர் தம்பதியினரிடம் கூறியுள்ளார். இதற்கிடையே, தம்பதியினருக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து வாட்ஸ்அப் கால் வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் தங்களிடம் உங்களுடைய அந்தரங்க வீடியோ உள்ளது. இதை சோசியல் மீடியாவில் வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளனர்.

முதலில் பயந்த தம்பதியினர் பின்னர் தைரியத்தை வர வைத்துக்கொண்டு வெள்ளறடா காவல் நிலையத்திற்கு சென்று இது சம்பந்தமான வாட்ஸ் அப் ஆதாரங்களை காண்பித்து புகாரளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட வெள்ளறடா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சங்கீத் மற்றும் மிதுன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி இருக்கும் இருவரையும் தேடி வருகின்றனர்.

Read More : பெண்களே..!! உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா..? இந்த பிரச்சனை இருக்கா..? இதுக்கு தீர்வு தான் என்ன..?

Tags :
உடலுறவுதொழிலாளர்கள்முதலாளிவீடியோ
Advertisement
Next Article