முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வெளிமாநில பெண்ணை வரவழைத்து அடிக்கடி உல்லாசம்..!! பணம் தராததால் அதிமுக நிர்வாகியை ஓட விட்ட பெண்..!!

The woman, who was already angry at not paying her, said, 'Are you beating me?' asked and attacked the administrator in return.
10:24 AM Sep 25, 2024 IST | Chella
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் வசித்து வருபவர் அதிமுக மூத்த நிர்வாகி. இவருக்கு 35 வயது மதிப்புள்ள பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பெண் கேரளாவை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் அந்த பெண்ணை, அடிக்கடி கேரளாவில் இருந்து வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார் அந்த நிர்வாகி. இவருக்கு சொந்தமான குடோன் ஒன்று நாகர்கோவிலில் உள்ளது. இங்கு பந்தல் பொருட்களை போட்டு வைத்திருக்கிறாராம். இந்த குடோனைதான், தன்னுடைய "லாட்ஜ்" போல அதிமுக நிர்வாகி பயன்படுத்தி வந்துள்ளார்.

Advertisement

இந்த குடோனுக்கு கேரள பெண்ணை அழைத்து வந்து, சில நாட்கள் யாருக்கும் தெரியாமல் தங்க வைத்து, அவருடன் உல்லாசமாக இருப்பது வழக்கமாம். பிறகு அந்த பெண்ணுக்கு பணத்தை கொடுத்து மீண்டும் கேரளாவுக்கு அனுப்பி வைத்துவிடுவாராம். அப்படித்தான், சமீபத்தில் அந்த நிர்வாகி, பெண்ணை அழைத்து வந்துள்ளார். வழக்கம் போல் தங்க வைத்து உல்லாசமாக இருந்துள்ளார். ஆனால், இந்த முறை பணம் எதுவும் கொடுக்கவில்லையாம்.

இதனால், இருவருக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது. அதுமட்டுமின்றி, தன்னுடைய நண்பர்களுடனும் உல்லாசமாக இருக்க வேண்டுமென அந்த கேரள பெண்ணை அதிமுக நிர்வாகி கட்டாயப்படுத்தியுள்ளார். அந்த நண்பர்கள் அனைவருமே, அரசியல் கட்சியை சேர்ந்தவர்களாம். ஆனால், இதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அதிமுக நிர்வாகி, அந்த பெண்ணை தாக்கியிருக்கிறார்.

ஏற்கனவே தனக்கு பணம் தராத கோபத்தில் இருந்த அந்த பெண்ணும், "என்னையே அடிக்கிறீயா?" என கேட்டு, அந்த நிர்வாகியை பதிலுக்கு சரமாரியாக தாக்கினாராம். அதிமுக நிர்வாகியை ஆவேசத்துடன் அடித்து துவம்சம் செய்ததுடன், அவரது சட்டை, லுங்கியை கிழித்து நிர்வாணப்படுத்தியுள்ளார். அடி தாங்க முடியாமல் அந்த நிர்வாகி வீட்டுக்குள் ஓடிப்போனாராம். இதனை அங்கிருந்தவர்கள் சிலர், செல்போனில் வீடியோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

Read More : அடுத்த ஷாக்..!! லட்டு பிரசாத பாக்கெட்டுகளில் எலிக்குட்டிகள்..!! எந்த கோயிலில் தெரியுமா..?

Tags :
கன்னியாகுமரி மாவட்டம்கேரள பெண்நாகர்கோயில்
Advertisement
Next Article