For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பிரிந்து விடலாம் என்று கூறிய காதலி..! ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கூட்டிச்சென்று காதலன் செய்த கொடூரம்..!

08:35 PM Nov 18, 2023 IST | 1Newsnation_Admin
பிரிந்து விடலாம் என்று கூறிய காதலி    ஆள் நடமாட்டமில்லாத இடத்திற்கு கூட்டிச்சென்று காதலன் செய்த கொடூரம்
Advertisement

கர்நாடக மாநிலத்தில் பொறியியல் கல்லூரி மாணவியை அவரது காதலன் கழுத்தை அறுத்து கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த இளைஞரை கைது செய்துள்ள காவல் துறை அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

கர்நாடக மாநிலத்தின் ஹோசஹள்ளி பகுதியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வந்த மாணவி சுசித்ரா (20). இவருக்கும் அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரான தேஜஸ்(23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இவர்கள் இருவரும் கடந்த ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் காதலர்களிடையே அடிக்கடி மோதலும் வாக்குவாதமும் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதனால் இந்த காதல் சரிப்பட்டு வராது எனக் கருதிய சுசித்ரா நாம் பிரிந்து விடுவோம் என காதலன் தேஜஸிடம் தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த காதலன் நம் பிரச்சினையை பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறி நகரின் ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு காதலியை அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு வைத்து அந்தப் பெண்ணின் கழுத்தை கொடூரமாக அறுத்து கொலை செய்த தேஜஸ் தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.

இளம் பெண் ரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்த அந்தப் பகுதியில் உள்ளவர்கள் அந்தப் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுசித்ரா உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்தப் பெண்ணை கொலை செய்த காதலனை கைது செய்து விசாரித்ததில் தன்னை காதலித்து விட்டு பிரிந்து சென்று விடுவோம் என்று ஏமாற்றியதால் சுசித்ராவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

Tags :
Advertisement