For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு!. பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை!. 3 பயங்கரவாதிகள் சிக்கினர்!.

Encounter underway between terrorists and security forces in J&K's Kulgam
08:53 AM Sep 28, 2024 IST | Kokila
காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு   பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை   3 பயங்கரவாதிகள் சிக்கினர்
Advertisement

Terrorists: ஜம்மு காஷ்மீர் குல்காமில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டையில் 3தீவிரவாதிகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காமில் உள்ள அதிகாம் தேவ்சர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அப்பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இரண்டு முதல் மூன்று பயங்கரவாதிகள் அப்பகுதியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை, காஷ்மீர் மண்டல காவல்துறை X தளத்தில் பதிவிட்டு உறுதிசெய்துள்ளது. மேலும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

Readmore: அவகேடோ Vs ஆலிவ் எண்ணெய்!. எது ஆரோக்கியமானது?

Tags :
Advertisement