முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பட்டாசு ஆலை வெடி விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

03:18 PM May 09, 2024 IST | Kathir
Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்த வெடி விபத்தின் காரணமாக பட்டாசு ஆலையின் 7 அறைகள் தரைமட்டமாகியுள்ளன.

Advertisement

முதற்கட்ட தகவலாக 7 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அந்த ஆலையில் பாட்டாசுகள் வெடித்து வருவதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக் கூறப்படுகிறது.

Tags :
Fireworks factory explosionபட்டாசு ஆலையில் வெடி விபத்து
Advertisement
Next Article