For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Chennai: செய்தியாளர் மீது FIR பதிவு...! திமுக குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்...! அண்ணாமலை அதிரடி...!

05:30 AM Mar 02, 2024 IST | 1newsnationuser2
chennai  செய்தியாளர் மீது fir பதிவு     திமுக குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்     அண்ணாமலை அதிரடி
Advertisement

செய்தியாளரை தாக்கிய திமுக குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக, திமுக சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசுவுக்குச் சொந்தமான, சஹாரா கூரியர் நிறுவனத்தில், நேற்றைய தினம், தேசிய போதைப் பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் சோதனை நடத்தியதை, செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் செந்தில் குமாரை, அறையில் அடைத்து வைத்து, திமுகவினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

Advertisement

இதனை அடுத்து, அவர் அளித்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, தற்போது, 55 வயது பெண்மணி ஒருவரை, செந்தில் குமார் மீது போலியான புகார் கொடுக்க வைத்து, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுகவின் பேச்சைக் கேட்டு, தமிழக காவல்துறை செயல்படுவது, மிகவும் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, அவர்கள் பணி தர்மத்துக்கு விரோதமானது.

காவல்துறை, சட்டப்படி நடக்க வேண்டுமே தவிர, திமுக கட்சியின் ஒரு பிரிவாக அல்ல. உடனடியாக, செந்தில் குமார் மீது பதிவு செய்துள்ள பொய்யான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும், செந்தில் குமாரைத் தாக்கிய திமுக குண்டர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்..

Advertisement