விவசாயிகள் போராட்டம் எதிரொலி..!! மார்ச் 12ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!!
விவசாயிகள் போராட்டத்தை முன்னிட்டு, மார்ச் 12ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2020ல் விவசாயிகள் போராட்டத்தின் போது அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை எனக்கூறி, நாளை (பிப்.13) டெல்லிக்கு கூட்டமாக நுழைந்து பேரணி மற்றும் போராட்டம் நடத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச எல்லையில் 5,000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகளைத் தடுக்க, பஞ்சாப், சண்டிகர், ஹிமாச்சல் பிரதேச எல்லையான பஞ்ச்குடாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ள நிலையில், டெல்லி முழுவதும் வரும் மார்ச் 12ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரவை மீறி போராடுவோரை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெரிய அளவில் கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி காவல்துறை கூறுகையில், விவசாயிகளின் போராட்டங்களை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எந்தவொரு மோதல் சம்பவங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, கூட்டங்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது" எனக் கூறினர்.