முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

X: விவசாயிகள் போராட்டம்!… மத்திய அரசின் உத்தரவில் உடன்பாடில்லை!… எக்ஸ் நிறுவனம் காட்டம்!

08:12 AM Feb 23, 2024 IST | 1newsnationuser3
Advertisement

X: சில குறிப்பிட்ட எக்ஸ் கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி உத்தரவிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை என்று எக்ஸ் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். இதில் விவசாயிகளை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை செய்து வருகின்றனர். இந்தநிலையில் விவசாயிகள் நடத்தி வரும் பேரணியுடன் தொடர்புடைய 177 சமூக வலைதள கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி, எக்ஸ்' நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இது தொடர்பாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள நோட்டீஸ் குறித்து, 'எக்ஸ்' நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சில குறிப்பிட்ட எக்ஸ் கணக்குகளை தற்காலிகமாக முடக்கும்படி மத்திய அரசு எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அந்த உத்தரவுக்கு மதிப்பளித்து, அந்த கணக்குகளை இந்தியாவில் மட்டும் முடக்கி உள்ளோம். மத்திய அரசின் நடவடிக்கையில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த பதிவுகளுக்கும் கருத்து சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அரசின் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு அளித்து இருப்பதால் அது குறித்து மேற்கொண்டு பேச முடியவில்லை. அந்த உத்தரவின் நகலையும் வெளியிட முடியவில்லை.

தன்னிச்சையான முடிவு ஆனால் அவற்றை வெளியிடுவது அவசியம் என கருதுகிறோம். இல்லாவிட்டால் தன்னிச்சையான முடிவுகள் எடுக்கப்படுவதை தடுக்க முடியாது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிக்கையை தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள காங்., பொது செயலர் ஜெய்ராம் ரமேஷ், நாட்டில் ஜனநாயக படுகொலை நிகழ்ந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

English summary: Social Media Company X has issued a statement saying that we do not agree with the central government's actions in ordering the temporary freezing of certain accounts.

Readmore: “காங்கிரஸ், ஆம் ஆத்மியின் I.N.D.I.A கூட்டணி தலைநகரில் MODI மேஜிக்கை தடுக்குமா.?” – கடந்த தேர்தல்களின் முழு விவரம்.!

Tags :
Company XDisagreement with the central government'sஅரசின் உத்தரவில் உடன்பாடில்லைஎக்ஸ் நிறுவனம்விவசாயிகள் போராட்டம் எதிரொலி
Advertisement
Next Article