தமிழ் நடிகையுடன் அமைச்சர் மகன் காதல் - வைரலாகும் போஸ்ட்..!!
பிரபல மலையாள நடிகர் மற்றும் அமைச்சர் சுரேஷ் கோபியின் இளைய மகன் தமிழ் நடிகை ஒருவரை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேஷ் கோபி, தற்போது மத்திய அமைச்சராகவும் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சுரேஷ் கோபிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில் மகள் பாக்யாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் முடிந்தது. இவருடைய மூத்த மகன் கோகுல் சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இளைய மகன் மாதவ் கோபியும் ஒரு மலையாள படத்தில் மூலம் கதாநாயகனாக நடித்துள்ள நிலையில் இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
மாதவ் கோபி ஒரு மலையாளப் படத்தில் நாயகனாக நடித்துள்ள நிலையில், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ‘ரணம்’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்த நடிகை செலின் ஜோசப்பை காதலிப்பதாக பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நான் ஒருவரை சிறப்பான முறையில் கொண்டாட விரும்புகிறேன்.
என்னுடைய குறைகள் தெரிந்தும் என்னை ஓய்வெடுக்க விடாமல், நான் வெற்றிபெற்ற ஒரு மனிதனாக முன்னேறுவதற்கு உறுதுணையாக இருந்தவர் அவர்தான். அவரது புன்னகை எனது வாழ்க்கையை ஒளிரச் செய்துள்ளது. அவரது குரல் என் காதுகளில் இன்னிசையாக ஒலிக்கிறது. அவரால் எனக்கு அளவிட முடியாத ஆற்றல் கிடைக்கிறது, என் வாழ்க்கை ஒளிமயமாகி உள்ளது,” என பதிவில் தெரிவித்துள்ளார். மாதவ் கோபி தமிழ் நடிகை ஒருவரை காதலிப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.