For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Fake News | உண்மையில் அமிதாப் பச்சனுக்கு நடந்தது என்ன..? ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் பின்னணி..!!

11:09 AM Mar 16, 2024 IST | 1newsnationuser6
fake news   உண்மையில் அமிதாப் பச்சனுக்கு நடந்தது என்ன    ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையின் பின்னணி
Advertisement

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவு குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Advertisement

நடிகர் அமிதாப் பச்சன், மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் (Kokilaben Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு இதயத்தில் பிரச்சனை இல்லையென்றும், காலில் ஏற்பட்ட ஒரு ரத்தக்கட்டியை (clot) சரிசெய்ய ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, பச்சனின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நேற்று மாலையில், அமிதாப் பச்சன் மற்றும் மகன் அபிஷேக் தானேவில் உள்ள தாதோஜி கொண்டதேவ் ஸ்டேடியத்தில் இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் (ஐஎஸ்பிஎல்) இன் மஜ்ஹி மும்பை மற்றும் கொல்கத்தாவின் டைகர்ஸ் இடையேயான இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட புகைப்படம் வெளியானது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் அமிதாப் பச்சன் மைதானத்தை விட்டு வெளியேறுவதைக் காணலாம். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், அவரது உடல்நிலை குறித்து அவரிடம் கேட்டார். அதற்கு அமிதாப் பச்சன், தான் நலமாக இருப்பதாக தெரிவித்தார்.

Read More : BREAKING | ’இனி அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவிகளுக்கும் ரூ.1,000’..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு..!!

Advertisement