முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Chennai Train : மகிழ்ச்சி செய்தி...! கிளாம்பாக்கம் செல்லும் பயணிகளுக்காக ரயில் சேவை நீட்டிப்பு‌...! முழு விவரம் இதோ

07:33 AM Feb 25, 2024 IST | 1newsnationuser2
Advertisement

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு.

Advertisement

கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செல்வோருக்கு வசதியாக சென்னை கடற்கரை - தாம்பரம் செல்லும் 5 ரயில்கள், சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 26-ம் தேதி முதல் இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் தாம்பரம் வரை செல்லும் ரயில்கள், கூடுவாஞ்சேரி வரையும் 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் மறு மார்க்கமாக புறப்பட்டு சென்னை கடற்கரையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல; பயணிகள் தேவைக்காக மாநகர பேருந்துகளை நாளை கூடுதலாக இயக்க தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தெற்கு ரயில்வே விடுத்திருந்த கோரிக்கையை ஏற்று தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 10.30 மணி முதல் மாலை 3.30 வரை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தாம்பரம், கிண்டி, தியாகராயர் நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

English Summary : Extension of train service for commuters to kilambakkam

Advertisement
Next Article