For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறப்பு ரயிலின் இயக்கம் மார்ச் 4 முதல் ஏப்ரல் 1 தேதி வரை நீட்டிப்பு...! தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு...!

06:20 AM Feb 09, 2024 IST | 1newsnationuser2
சிறப்பு ரயிலின் இயக்கம் மார்ச் 4 முதல் ஏப்ரல் 1 தேதி வரை நீட்டிப்பு     தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு
Advertisement

எர்ணாகுளம்-பிரம்மபூர் முன்பதிவற்ற வாராந்திர சிறப்பு ரயிலின் இயக்கம் மார்ச் 4 முதல் ஏப்ரல் 1 தேதி வரை நீட்டிப்பு.

தாம்பரம் - சந்திரகாச்சி அதிவேக சிறப்பு ரயிலின் இயக்கம் பிப்ரவரி 14-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயிலின் இயக்கம் பிப்ரவரி 15 முதல் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம்-பிரம்மபூர் முன்பதிவற்ற வாராந்திர சிறப்பு ரயிலின் இயக்கம் மார்ச் 02-ம் தேதி முதல் மார்ச் 30–ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயிலின் இயக்கம் மார்ச் 4 முதல் ஏப்ரல் 1 தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

காரைக்காலிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயிலின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த ரயில் காரைக்காலிலிருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45-க்கு திருச்சிராப்பள்ளியை வந்தடையும்.

நாகர்கோவில்-திருவனந்தபுரம்-நாகர்கோவில் சிறப்பு விரைவு ரயில் கேரள மாநிலம் கொச்சுவேலி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் மாதம் 1 முதல் இந்த ரயில் திருவனந்தபுரத்தையும் தாண்டி கொச்சுவேலி வரை செல்லும் என்றும், இனி இந்த ரயில் நாகர்கோவில்-கொச்சுவேலி சிறப்பு விரைவு ரயில் என்று அழைக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுமார்க்கத்தில் இந்த ரயில் மார்ச் 2 முதல் தனது இயக்கத்தைத் துவக்க உள்ளது.

Tags :
Advertisement