For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’பிறப்புறுப்பில் கம்பியை நுழைத்து சித்ரவதை’..!! ’பாலியல் அடிமையாக இருந்தேன்’..!! தமிழ் இயக்குனர் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு..!!

At the age of 18, the director approached himself through his wife. He wanted to have a child with her father as his father.
08:11 AM Sep 06, 2024 IST | Chella
’பிறப்புறுப்பில் கம்பியை நுழைத்து சித்ரவதை’     ’பாலியல் அடிமையாக இருந்தேன்’     தமிழ் இயக்குனர் மீது நடிகை பகீர் குற்றச்சாட்டு
Advertisement

மலையாள சினிமா துறையில் தொடர்ந்து முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மூத்த தென்னிந்திய நடிகையான சௌமியா, தமிழ் இயக்குநர் ஒருவர் மீது பகீரங்கமான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அந்த இயக்குநர் தனக்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியது மட்டுமின்றி, பாலியல் ரீதியாகவும் வன்கொடுமையில் ஆழ்த்தியதாக பகீரை கிளப்பியுள்ளார்.

Advertisement

இதுகுறித்து ஊடகம் ஒன்றில் சௌமியா பேட்டியளிக்கையில், ”தன்னை ஒரு பாலியல் அடிமையாக அந்த இயக்குநர் நடத்தியதாக குற்றஞ்சாட்டினார். இருப்பினும், தற்போதைக்கு இயக்குநரின் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் கூறுகையில், தனது 18 வயதில் அந்த இயக்குநர் அவரின் மனைவியின் மூலம் தன்னை அணுகினார். தனது தந்தை போல் என்று கூறி தன்னுடன் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார்.

அந்த இயக்குநர் தன்னுடைய கல்லூரி காலத்தில் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாகவும், தான் மலையாள திரையுலகிற்கு வந்த பின்னர் அது தொடர்ந்து வந்ததாக கூறினார். 1990 காலகட்டங்களில் 3 வெற்றிகரமான திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். அந்த படங்களில் நடிக்கும்போது இந்த சித்ரவதைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, பொழுதுபோக்கிற்காக தன்னுடைய பிறப்புறுப்பில் கம்பியை நுழைத்து சித்ரவதைக்கு ஆளாக்கியதாக குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், கேரள அரசின் சிறப்பு புலனாய்வு குழுவிடம் இயக்குநரின் அடையாளத்தை தெரிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

இயக்குநருடன் ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்த அவர், "ஒரு நாள், அவரது மனைவி இல்லாத நேரத்தில், அவர் என்னை அவரது மகள் என்று அழைத்து முத்தமிட்டார். நான் முற்றிலும் உறைந்து போனேன். இதை என் நண்பர்களிடம் கூற நினைத்தேன். ஆனால் மிகவும் அசிங்கமாக இருந்தது. அந்த இயக்குநரின் மகளே அவர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், அந்த இயக்குநர் அதை முற்றிலும் மறுத்தவிட்டார்.

என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சக நடிகர் ஒருவர் ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பிட்டுள்ளார். இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் என்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளனர். இந்த கொடுமைகளில் இருந்து மீண்டு வர எனக்கு 30 ஆண்டுகள் ஆகியுள்ளது. எனவே, என்னைப் போல் பாதிக்கப்பட்ட பலரும் துணிந்து புகார் அளித்து வருகின்றனர்" என்றார்.

Read More : ’நைட்டு 11 மணிக்கு வர்றேன்’..!! பள்ளி மாணவியிடம் அத்துமீறி ஆசிரியர்..!! பாய்ந்தது போக்சோ..!!

Tags :
Advertisement