For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து..!! 2 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலி..!! ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சோகம்..!!

The incident in which 2 people died in the firecracker factory accident has caused a great tragedy.
11:34 AM Aug 14, 2024 IST | Chella
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து     2 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலி     ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சோகம்
Advertisement

பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுதான். பட்டாசுகள் இன்றி, தீபாவளி பண்டிகை முழுமை பெறாது. அந்த வகையில், இந்தியளவில் பட்டாசுக்குப் பெயர்போன ஊர் என்றால் அது சிவகாசிதான். சிவகாசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 1500-க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் சமயங்களில் அதிகளவிலான பட்டாசு உற்பத்திகள் அங்கு நடைபெறும். இதனால் பலநேரங்களில் பட்டாசு ஆலை விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. உயிருக்கு பாதுகாப்பில்லாத தொழிலாக பட்டாசு ஆலை இருந்து வந்தாலும், பலரும் வாழ்வாதாரம் தேடி இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாயத்தேவன்பட்டியில் இன்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More : வலியால் கதறி துடித்த 5 வயது சிறுமி..!! ஓவிய ஆசிரியரால் தீவிர சிகிச்சை..!! பள்ளியில் வைத்து பலாத்காரம்..!!

Tags :
Advertisement