முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'கைலி, பனியனுடன் மூட்டை தூக்கிய முன்னாள் அமைச்சர்..!!' வியந்து பார்த்த மக்கள்! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

05:26 PM Apr 27, 2024 IST | Mari Thangam
Advertisement

புதுச்சேரி முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் நெல் மூட்டை தூக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் கமலக்கண்ணன். இவர் அமைச்சராக பணியாற்றிய போதும் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் விளைநிலங்களில் விவசாயம் செய்து வருந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றதால், அரசு அலுவலகங்களில் கோப்புகளுடன் பிசியாக இருந்த அமைச்சர், அதன் பிறகு முழு நேர விவசாயப் பணியில் மூழ்கி விட்டார். தற்போது இவர் தனது விவசாய நிலத்தில் நெல் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். 

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அம்பகரத்தூர் சின்ன கடை தெருவில் உள்ள தனியார் கடைக்கு லுங்கி, பனியன் அணிந்து டிராக்டரில் வந்த முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், தனது விவசாய கூலி தொழிலாளிகளுடன் நெல் மூட்டைகளை சர்வ சாதாரணமாக தலையில் சுமந்து, கடையில் இறக்கி வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இந்த வேலையை செய்தால் தான் சாப்பாட்டுக்கு அரிசி கிடைக்கும் எனவும், எதிரில் நின்ற காய்கறி பயிரிடும் விவசாயியைக் கை காட்டி, அவர் காய்கறி பறிக்கவில்லை என்றால் குழம்பு வைக்க முடியுமா? என முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கேள்வி கேட்பதும் பதிவாகியுள்ளது.

Tags :
Ex ministerpuducheryviral vedio
Advertisement
Next Article