முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முன்னாள் அரசு ஊழியரின் மகளுக்கு போதை மாத்திரை கொடுத்து கூட்டு பலாத்காரம்..!! விசாரணையில் அதிர்ச்சி..!!

05:24 PM Dec 12, 2023 IST | 1newsnationuser6
Advertisement

உத்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள கடையில் இளம்பெண் ஒருவர் தேனீர் அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அப்போது, கடையில் உள்ள சத்யா என்ற நபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில், தன் மொபைல் போனில் சார்ஜர் தீர்ந்ததாகவும், சார்ஜ் போட உதவும்படி சத்யாவிடம் கேட்டுள்ளார்.

Advertisement

உடனே தனக்கு தெரிந்த நண்பரின் காரில் சார்ஜ் இருப்பதாக கூறி அந்த இளம்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். இதை நம்பி, அந்த பெண் அவருடன் சென்றுள்ளார். சிறிது தூரத்தில் அந்த கார் நின்ற நிலையில், காருக்கு அருகில் சென்றபோது அந்த இளம்பெண்ணை காருக்குள் இருந்த இருவர் உள்ளே இழுத்து காரின் கதவை மூடியுள்ளனர். பின்னர் போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தை இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்துள்ளனர்.

பின்னர், பாலத்தின் கீழ் வைத்து 3 பேர் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் தனது பெற்றோரிடம் கூறிய நிலையில், அவர்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியின் மகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Tags :
இளம்பெண்உத்தரப்பிரதேசம்காவல்நிலையம்கூட்டு பலாத்காரம்
Advertisement
Next Article