For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

முன்னாள் CM எடியூரப்பா மீது பாலியல் வழக்கு..!! சிறுமியை பலாத்காரம் செய்ததாக தாய் பரபரப்பு புகார்..!!

08:37 AM Mar 15, 2024 IST | 1newsnationuser6
முன்னாள் cm எடியூரப்பா மீது பாலியல் வழக்கு     சிறுமியை பலாத்காரம் செய்ததாக தாய் பரபரப்பு புகார்
Advertisement

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிஎஸ் எடியூரப்பா (வயது 81) 17 வயது சிறுமியின் தாயார் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் அடிப்படையில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்புச் சட்டம், 2012 (போக்சோ) கீழ் பெங்களூரு காவல்துறையால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

POCSO பிரிவு 8 (பாலியல் வன்கொடுமை) மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 A (எந்தப் பெண்ணையும் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியைப் பயன்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 2 ஆம் தேதி சிறுமி மற்றும் அவரது தாயார் உதவி கோரி எடியூரப்பாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி ஒரு அறையில் வைத்து எடியூரப்பா பாலியல் பலாத்காரம் செய்ததாக தாயார் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ஊழியர்களுக்கு Work From Home..!! மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு..!! தண்ணீரின்றி அவதிப்படும் பெங்களூரு..!!

Advertisement