For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"தவழ்ந்து தான் முதலமைச்சரானேன்.." "அது என்னுடைய கடின உழைப்பு.." எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உருக்கம்.!

09:14 PM Jan 07, 2024 IST | 1newsnationuser7
 தவழ்ந்து தான் முதலமைச்சரானேன்     அது என்னுடைய கடின உழைப்பு    எஸ்டிபிஐ மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி உருக்கம்
Advertisement

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் சார்பாக மதுரையில் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு இன்று நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான திரு எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர் முதலமைச்சராவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.

Advertisement

அடிமட்ட தொண்டனாக இருந்து கடினமாக உழைத்து முதலமைச்சர் பதவியை அடைந்திருக்கிறேன். கீழிருந்து தவழ்ந்து தவழ்ந்து நான் உயரங்களை அடைந்தேன். என்னுடைய கடின உழைப்பை தற்போதைய முதல்வர் கொச்சைப்படுத்தி வருகிறார். அதிமுக பாரதிய ஜனதாவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது. சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இருக்காது என தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் அதிமுக கட்சி இஸ்லாமியர்களை அரண் போல பாதுகாக்கும் கட்சி. சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் எனவும் தெரிவித்திருக்கிறார். இந்தக் கூட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டமே அதிமுகவின் வெற்றியை உறுதி செய்து விட்டது எனவும் தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் திரு எடப்பாடி பழனிச்சாமி உடன் முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார் செல்லூர் ராஜு விஜயபாஸ்கர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement