முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’எவன் கூட தொடர்புல இருக்க’..!! மனைவியை அடித்தே கொன்ற கணவன்..!! கடைசியில் ட்விஸ்ட்..!!

01:43 PM Apr 20, 2024 IST | Chella
Advertisement

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர், அவரை அடித்துக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தை அடுத்த தித்திகி கிராமத்தைச் சேர்ந்தவர் பீமன்னா. இவருக்கும் கவிதா (26) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென மனைவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வழக்கம் போல மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த பீமன்னா தனது மனைவி கவிதாவை கல்லால் அடித்துக் துடிதுடிக்க கொலை செய்துள்ளார். பின்னர், போலீசுக்கு பயந்து பீமன்னாவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தூக்கில் தொங்கிய பீமன்னா உடலை இறக்கினர்.

இதையடுத்து, அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது கவிதா ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More : மக்களே செம குட் நியூஸ்..!! இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு..!! வெளுத்து வாங்கும் மழை..!!

Advertisement
Next Article