முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Vijay: போதும்! போதும்!… கேரள ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிய நடிகர் விஜய்!… மாலை அணிவித்து மரியாதை!

08:31 AM Mar 24, 2024 IST | Kokila
Advertisement

Vijay: நடிகர் விஜய்யின் கோட் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்தப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இருவேடங்களில் நடித்து வருகிறார். திரைப்படத்தின் சூட்டிங் சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டு கடந்த சில தினங்களாக கேரளாவின் திருவனந்தபுரத்திலும் நடத்தப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 6 நாட்களாக கேரளாவின் திருவனந்தபுரத்தில் கிரீன் ஃபீல்ட் போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்தது. இந்நிலையில் கேரளா சூட்டிங்கை முடித்துக் கொண்டு நேற்றைய தினம் விஜய் சென்னை திரும்பியுள்ளார்.

கடந்த 6 நாட்களும் விஜய்யை அவரது சூட்டிங் ஸ்பாட், தங்கியிருந்த ஹோட்டல் போன்ற இடங்களில் காத்திருந்து பார்த்து தங்களது உற்சாகத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வந்தனர். அதன் ஒருபகுதியாக விஜய்யை சந்தித்த ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.கழுத்து நிறைய மாலை இருக்கிறது என விஜய் கூறியும் மேலும் மேலும் மாலையை அணிவித்துள்ளனர். இத்தகைய ரசிகர்களின் அன்பால் விஜய் நெகிழ்ந்துள்ளார்.

Readmore: வெங்காயம் ஏற்றுமதி தடை நீட்டிப்பு…! மத்திய அரசு அதிரடி உத்தரவு…!

Advertisement
Next Article